அமெரிக்காவில் தொடரும் பேரவலம் – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 450 பேர் பலி!

Wednesday, April 29th, 2020

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 450 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றுதியான 25 ஆயிரத்து 40 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சர்டவதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் கொவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்காவில் இதுவரையில் 59 ஆயிரத்து 249 பேர் பலியாகியுள்ளதோடு 10  இலட்சத்து 35 ஆயிரத்து 396 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை ஸ்பெயினில் 301 பேர் இத்தாலியில் 382 பேர் பிரான்சில் 367 பேர் மற்றும் பிரித்தானியாவில் 586 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: