அமெரிக்காவின் விமான தாக்குதலில் ஈராக்கில் 105 பொதுமக்கள் பலி!

Saturday, May 27th, 2017

ஈராக்கின் மொசுல் நகரில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் குறைந்தபட்சம் 105 பொதுமக்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயாதீன் என்னும் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டு ஸ்னைப்பர்களை இலக்கு வைத்து மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன்போது தீவிரவாதிகளின் கட்டடத்திலிருந்து வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டடத்தின் கீழ்மாடிகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் கட்டடம் இடிந்து வீழ்ந்ததால் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறிருக்க மற்றுமொரு சம்பவமாக நேற்று வியாழக்கிழமை கிழக்கு சிரிய நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி விமானத் தாக்குதலில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பாளர்களின் தகவல்களின் பிரகாரம், டேயர் எஸ்சோர் மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் குடும்பங்கள், குழந்தைகள் உள்ளிட்ட 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: