அதிர்ஷ்டவசமாக நடுவானில் விமானங்கள் மோதிக்கொள்வது தவிர்ப்பு!
Thursday, August 4th, 2016கவுகாத்தில் ஏர்இண்டிகோ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதில் இருந்து தப்பிய அதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
மும்பையில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்ற இண்டிகோ விமானம் லோக்பிரியா கோபிநாத் பர்டோலி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை தரையிறங்க முயற்சித்த போது சென்னையை நோக்கி புறப்பட்ட மற்றொரு இண்டிகோ விமானம் அதனுடைய விமான ஓடு தளத்தை கடந்தது. ”கவுகாத்தி நோக்கி சென்ற விமானம் பருவமழை காரணமாக தடுமாற்றத்தை எதிர்க்கொண்டு உள்ளது. இதனால் விமானம் உடனடியாக 250-300 அடி வரையில் செங்குத்தாக கீழே இறங்கிஉள்ளது,” அதே வேளையில் சென்னையை நோக்கிய விமானம் புறப்பட்டது.
இறுதியாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 4 பயணிகள் மற்றும் 2 பணியாளர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
Related posts:
நியுஸிலாந்தை தாக்கியது சுனாமி: 2 பேர் பலி!
கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்தையும் தாண்டியது !
பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு!
|
|