அதிகரிதத்து போர் பதற்றம் – இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானங்கள் இரத்து!
Thursday, October 3rd, 2024
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல்களால் டெல் அவிவ் விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதே இதற்குக் காரணம்.
எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முந்திய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளை திட்டமிட்டுள்ளவர்கள் உரிய திகதிகளை மாற்றியமைக்குமாறு தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களும் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஏதேனும் அபாயகரமான சூழ்நிலை ஏற்படின் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்
000
Related posts:
வருகிறது ஸ்மார்ட் பாஸ்போர்ட்!
எகிப்தில் பாரிய தொடருந்து விபத்து : 15 பேர் பலி 40 க்கும் அதிகமானோர் காயம்!
தனது பிரஜைகளுக்காக ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பிக்க முடிவு!
|
|
|


