அங்கோலாவில் 17 படையினர் கொலை!

Tuesday, August 2nd, 2016

அங்கோலாவின் எண்ணெய் வளமிக்க காபின்டா மாகாணத்தில் நடைபெற்ற மோதல்களில் 17 அரசப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கோலா பிரிவினைவாதக் குழு தெரிவித்துள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற மோதல்களில் இரண்டு கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டதாக காபின்டா என்கிளேவ் விடுதலை முன்னணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

அங்கோலா ஆட்சியாளர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.கடந்த வாரம் காபின்டா என்கிளேவ் விடுதலை முன்னணி ஒன்பது அரசு படையினரை காபின்டாவில் கொன்றது.இந்த மாகணத்தில் பல தசாப்த காலமாக பிரிவினைவாதிகள் போராடி வருகின்றனர்.

ஆப்பிரிக்காவின் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் முன்னிலையில் உள்ள நாடுகளில் அங்கோலா ஒன்றாகும்.

Related posts: