அகதிகள் இறப்பு இவ்வாண்டு அதிகரிப்பு!
Saturday, November 19th, 2016
கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350-க்கு மேலான அகதிகள் இறந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடிவரவு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வருவதற்கு கடல் கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பெரும்பாலான ஆப்ரிக்கர்கள்தான் சமீபத்திய இந்த முயற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியிலுள்ள சர்வதேச குடிவரவு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சமீபத்திய புள்ளிவிவரம், இந்த ஆண்டு இதுவரை இறந்த அல்லது காணாமல்போன குடியேறிகளின் எண்ணிக்கையை 4600 -க்கும் மேலாக்கியிருக்கிறது.கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்பட்ட இறப்பை விட இந்த ஆண்டு 1000 பேர் அதிகமாக இறந்துள்ளனர்.

Related posts:
ஈரான் அதிபர் தேர்தல் மீண்டும் வென்றார் ஹசான் ரவுஹானி
4 நாடுகளை சிவப்புப் பட்டியலில் இணைத்தது இங்கிலாந்து!
இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா - இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்களிப்பவர்கள் ஜனநாயகத்தின் திருவி...
|
|
|


