ஃபோக்ஸ்வாகன் மாசு சோதனை மோசடி: 15 பில்லியன் டாலர் தீர்வுத் தொகை தர அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, October 26th, 2016

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான, ஃபோக்ஸ்வாகன், மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றிய மோசடி தொடர்பாக, சுமார் 15 பில்லியன் டாலர் பணத்தை தீர்வுத் தொகையாகத் தர வேண்டும் என்ற ஏற்பாட்டுக்கு அமெரிக்காவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், சுமார் அரை மில்லியன் ஃபோக்ஸ்வாகன் உரிமையாளர்கள் தங்களது கார்களை மீண்டும் விற்க முடியும் அல்லது தங்களது கார்களை சரி செய்து கொள்ள முடியும் .அவர்கள் இழப்பீடாக 10,000 டாலர் வரை பெற முடியும்.

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வண்டிகள் தூய்மையானதாக இருப்பதாக காட்டிக் கொள்ள, மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றி மோசடி செய்ததை கடந்த ஆண்டு அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.

அமெரிக்க மோட்டார் தொழில் வரலாற்றில் இந்தத் தீர்வு தொகையானது ஒரு சாதனையாகும். ஆனால் ஃபோக்ஸ்வாகன் மேலும் பல செலவுகளை எதிர்நோக்கியுள்ளது. அதில் அபராதம், 16 அமெரிக்க மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பிற நாடுகளில் உள்ள வழக்குகள் ஆகியவை அடங்கும்.

_92091387_one

Related posts: