IPL போட்டிகள் செப்டம்பரில்!

Friday, July 24th, 2020


ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு ,ராச்சியத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

,தற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது.

,ந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ,ந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: