900 புள்ளிகளுக்கு மேல் பெற்று கோலி சாதனை!

Friday, February 23rd, 2018

ஒருநாள் துடுப்பாட்டவீரர் தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்திய அணி தலைவர் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – தென்ஆபிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 3 சதங்கள் உட்பட 558 ஓட்டங்கள் குவித்திருந்தார். இதன் ஒருநாள் போட்டிக்கான ஐ.சி.சி துடுப்பாட்ட தரவரிசையில் வரலாற்று உச்சத்தை பெற்றுள்ளார்.

ஐ,சி.சி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைகளை வெளியிட்டது. இதில் விராட் கோலி 909 புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சக்கட்ட புள்ளிகள் எடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும், ஒரேவேளையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளிகளு மேல் பெற்ற 2-வது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஏபி டி வில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் விவியன் ரிச்சர்ட்சன் 1985-ல் 935 புள்ளிகள் பெற்றிருந்தார். இதுதான் உச்சக்கட்ட புள்ளியாகும், அதன்பின் சகீர் அப்பாஸ் 1983-ம் ஆண்டு 931 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

  1. கிரேக் செப்பல் 1981-ம் ஆண்டு 921 புள்ளிகள்
  2. டேவிட் கோவன் 1983-ம் ஆண்டு 919 புள்ளிகள்
  3. டீன் ஜோன்ஸ் 1991-ம் ஆண்டு 918 புள்ளிகள்
  4. ஜாவித் மியான்டட் 1987-ல் 910 புள்ளிகள்
  5. விராட் கோலி 2018-ல் 909 புள்ளிகள்
  6. பிரையன் லாரா 1993-ம் ஆண்டு 908 புள்ளிகள்
  7. ஏபி டி வில்லியர்ஸ் 2015-ம் ஆண்டு 902 புள்ளிகள்
  8. ஹசிம் அம்லா 2012-ம் ஆண்டு 901 புள்ளிகள்

Related posts: