5 யாழ்.மாவட்ட வீரர்களுடன் 44ஆவது ஆசிய பாடசாலைகள் கால்பந்தாட்டப் போட்டிக்கு தயாரானது இலங்கை!
Sunday, May 22nd, 201644ஆவது ஆசிய பாடசாலைகளுக்கி டையிலான (18வயதின் கீழ்) கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியில் யாழ். மாவட்டத்திலிருந்து 5 வீரர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலிருந்து ரெசிக்ஸ அமலதாஸ் மதுஷான், செபமாலைநாயகம் ஜூட் சுமன், இராசையா நேசராசா அன்தினி ரமேஷ் ஆகிய மூவரும், யாழ். மத்திய கல்லூரியிலிருந்து கோவிந்தராசா ரிது ஷான், ஜெசின் சயந்தன் ஆகிய இருவருமாக ஐந்து பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று தென் கொரியாவின் ஜியோங்ஜு விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இதில் பங்குபற்றும் 18 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலை அணியினர் கடந்த வியாழக்கிழமையன்று தென் கொரியா சென்றடைந்தனர்
இவ் வருடப் போட்டிகளில் தமது அணி திறமையை வெளிப்படுத்தும் முனைப்புடன் விளையாடும் என அணி பயிற்றுநர் ஏ.கே.எம். அஜ்வத் தெரிவித்தார்
காலி புனித அலோசியஸ் அணியினதும் கொழும்பு சோண்டர்ஸ் அணியினதும் கோல்காப்பாளரான ரிஷாத் ராஸிக் இவ்வணியின் தலைவராகவும், உதவி அணித் தலைவராக கொழும்பு றோயல் அணி வீரர் சத்துர அவிஷ்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
ரிஷாத் ராசிக், நவீன் ஜூட் (ஜாவா லேன்), மொஹமத் ஷஹீல் (சோண்டர்ஸ்) ஆகிய மூவரும் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடிவரும் சிறந்த வீரர்களாவர்.
இவர்கள் மூவருடன் யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் வீரர் ஆர். ஏ. மதுஷான் கடந்த வருடம் சீனாவில் நடைபெற்ற 43ஆவது ஆசிய பாடசாலைகள் கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிய அனுபவசாலியாவார்.
கடந்த வருடப் போட்டிகளில் இந்தியாவை 4 – 0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றி கொண்டிருந்தது. சிங்கப்பூர், ஹொங் கொங் ஆகிய நாடுகளுடனான போட்டிகளை தலா 2 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தது
பலம்வாய்ந்த சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பலத்த சவாலாக விளங்கிய இலங்கை அப் போட்டிகளில் தலா 0 1 என்ற கோல் அடிப்படையில் தோல்வியடைந்தது
எனினும் இலங்கை அணியினர் மற்றைய நாடுகளின் பலத்த பாராட்டைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது
இவ் வருடம் பத்து நாடுகள் பங்கு கொள்வதுடன் ஒரு குழுவில் சீனா, , தென் கொரியா (இரண்டாம் நிலை அணி), தாய்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை மோதவுள்ளது
மற்றைய குழுவில் இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர், தென் கொரியா (பிரதான அணி) ஆகியன இடம்பெறுகின்றன
இவ்வருடம் இலங்கையின் 18 வயதுக்குட்பட்ட குழாமில் யாழ். மாவட்டத்திலிருந்து 5 வீரர்களும் கொழும்பிலிருந்து ஒரு வீரருமாக 6 தமிழர்கள் இடம்பெறுகின்றனர்
சிறுபான்மையினரின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 9 முஸ்லிம் வீரர்களும் குழாமில் இடம்பெறுகின்றனர். 5 வீரர்கள் மாத்திரமே பெரும்பான்மை இனத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது
இலங்கை அதன் முதலாவது போட்டியில் மெக்கௌ அணியை நாளை திங்கட்கிழமை எதிர்த்தாடும். தொடர்ந்து தென் கொரியா (2), தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளை சந்திக்கும்.
18 வயதின்கீழ் இலங்கை குழாம் விபரம்
ரிஷாத் ராஸிக் (அணித் தலைவர், புனித அலோசியஸ்), சத்துர அவிஷ்க (உதவி அணித் தலைவர்), நிக்லஸ் ஜூட் நவீன் (இருவரும் றோயல்), ரெசிக்ஸ அமலதாஸ் மதுஷான், செபமாலைநாயகம் ஜூட் சுமன், இராசையா நேசராசா அன்தினி ரமேஷ் (மூவரும் இளவாலை புனித ஹென்றியரசர்), கோவிந்தராசா ரிதுஷான், ஜெசின் சயந்தன் (இருவரும் யாழ். மத்திய கல்லூரி), எம். கே. இஷான், எம். ஏ. எம். ஷஹீல், எம். ஐ. எம். இஜாஸ், (மூவரும் மருதானை ஸாஹிரா), எம். கே. எம். பாஸில் (ஹமீத் அல் ஹுசெய்னி), எவ். ஆர். முஜாஹித் அஹமத் (கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார்), எச். ஏ. ஃபைகர் (புத்தளம் ஸாஹிரா), எஸ். ஏ. ஆதில் (அலிகார் தேசிய பாடசாலை)
எம்.ஜே. ரிவ்கான் மொஹமத் (கிண்ணியா அல் அக்ஸா), எச். எம்.பி.பி. நிஷாந்த (கண்டி கிங்ஸ்வூட்), டி.ரீ. எதிரிவீர (கண்டி திரித்துவம்), எஸ். டி. சப்ரமித்ர இஷான் ஃபைகர் (புத்தளம் ஸாஹிரா), எஸ்.ஏ. ஆதில் (அலிகார் தேசிய பாடசாலை), எம்.ஜே. ரிவ்கான் மொஹமத் (கிண்ணியா அல் அக்ஸா), எச். எம். பி. பி. நிஷாந்த (கண்டி கிங்ஸ்வூட்), டி. ரீ. எதிரிவீர (கண்டி திரித்துவம்), எஸ். டி. சப்ரமித்ர இஷான் தனுஷ (இருவரும் பம்பலப்பிட்டி புனித பீற்றர்)
Related posts:
|
|