42 நாள்களில் 5 டெஸ்ட்கள் – கேலிக்குரியது என்று கொதிக்கும் வேகப்பந்து வீச்சாளர் அன்டர்சன்!
Thursday, June 14th, 2018இந்திய அணிக்கு எதிராக 42 நாள்களில் ஐந்து டெஸ்ட் ஆட்டங்கள் விளையாடும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அட்டவணையைக் கடுமையாக விமர்சித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. முதலில் ரி-20 தொடர், அதன் பின்னர் ஒரு நாள் தொடர், அதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் என்பன நடைபெறவுள்ளன.
டெஸ்ட் தொடர் ஆரம்பமாகும் நாளுக்கும் அது முடிவடையும் நாளுக்கும் இடையில் 42 நாள்களே உள்ளன. 25 நாள்கள் ஆட்டங்கள் நடைபெறும். ஆக 15 நாள் ஓய்வுதான் நான்கு டெஸ்ட் ஆட்டங்களுக்கு கிடைக்கவுள்ளது. இந்த ஓய்வு போதாது என்று கொதித்துள்ளார் அன்டர்சன்.
டெஸ்ட் ஆட்டங்களுக்கு உரிய மதிப்பை வழங்காத வகையில் இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது கேலிக்கூத்தானது. வீரர்கள் அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகப்படியான பணிச்சுமைக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகக்கூடிய வாய்ப்பை இந்த கடினமான அட்டவணை தந்துள்ளது என்று அன்டர்சன் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|