32 ஆவது ஒலிம்பிக்கில் முதலாவது தங்கம் வென்ற சீனா!
Saturday, July 24th, 2021கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு வழியாக 32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று ஆரம்பமாகியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
2021- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்று சீனா அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ரஷ்யா 2-வது இடத்தையும் சுவிட்சர்லாந்து 3-வது இடத்தையும் பிடித்தன.
Related posts:
சாமுவேல்ஸ் அதிரடியில் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி
ஆஸி பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கை போட்டிகளில் பங்கேற்பு!
உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகுகிறார் ஷிகார் தவான்!
|
|