T-20 உலகக்கிண்ண சாம்பியன் அணிக்கு 24 கோடி பரிசுத் தொகை
Sunday, March 20th, 2016
T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
தற்போது 10 அணிகள் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று வருகின்றன. இதில் இருந்து அரையிறுதிக்கு 4 அணிகள் முன்னேறும்.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் ஏப்ரல் 3ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன.
இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 24 கோடி ரூபா பரிசுத் தொகையாக கிடைக்கும்.
இது கடந்த தொடரை விட 5.70 கோடி ரூபா அதிகமாகும்.
அதேபோல் இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 10.3 கோடி ரூபாவும், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளுக்கு 5.14 கோடி ரூபாவும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
Related posts:
மீண்டும் வெற்றியை ருசித்தது ஜமைக்கா!
இலங்கை - அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான 20 க்கு 20 போட்டித் தொடர் இன்று ஆரம்பம்!
எதிர்வரும் 19 ஆம் திகதி காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல்!
|
|
|


