வெற்றிக்கு காரணம் இது தான் – சந்திக்க ஹத்துருசிங்க!

Thursday, June 6th, 2019

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றிக்கு அணியின் பந்துவீச்சாளர்களோ காரணம் என இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி, டக்வர்த் லூவிஸ் முறைப்படி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை பயிற்சியாளர் ஹத்துருசிங்க, இந்த வெற்றியானது எமக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு இலங்கை வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவர்கள் என நம்புகிறேன்.

இந்த ஆடுகளத்தில் எமது வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்த்திருந்தோம். அனுபவமிக்க வீரர் மலிங்கா, நுவன் பிரதீப்பும் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். இந்தப் போட்டிக்கான எமது அணித் தேர்வு சரியாக இருந்தது. நாங்கள் ஐந்து வேகப் பந்துவீச்சார்களுடன் களமிறங்கினோம். அதுதான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

இது இலங்கைக்கு அவசியமான வெற்றியாக இருந்தது. வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கு இந்தப் போட்டி மிகவும் உதவியிருந்தது. தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்திக்கும் போது அதனால் ஏற்படுகின்ற நெருக்கடிகளை வீரர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். எனவே, இந்த வெற்றியின் மூலம் எமது மனநிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாக சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் யூன் 7ம் திகதி பிரிஸ்டல் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.

Related posts: