உபாதையால் பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் விலகும் நடால்!

Sunday, December 31st, 2017

 

ஸ்பெயினின் முதற்தர வீரரான டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடால் தற்போது முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதால் பிரிஸ்பேன் ஓபனில் இருந்து விலகவேண்டிய நிர்க்க்கதி ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 16ம் திகதி ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்துக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் நடால் தெரிவித்துள்ளார்.

ரபேல் நடால் முழங்கால் உபாதை காரணமாக அபுதாபியில் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள முபடலா உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரிலிருந்தும் விலகியிர்ருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பல முக்கிய வீரர்கள் கலந்துக்கொள்ளும் பிரிஸ்பேன் இன்டர்நெசனல் டென்னிஸ் தொடர் ஜனவரி முதலாம் திகதி தொடங்கி ஜனவரி 8ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடால் தொடரிலிருந்து விலகியுள்ளமை, இரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தோற்றுவித்துள்ளது

Related posts: