பாகிஸ்தான் கிரிக்கட் அணித் தலைவராக சப்ராஸ் அஹமட் !

Sunday, September 15th, 2019


பாகிஸ்தான் கிரிக்கட் அணித் தலைவர் பதவியில் சப்ராஸ் அஹமட் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கு பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட் தலைமைதாங்க உள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி, அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறாமல் தோல்விடையந்ததை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கட் சபையினால், அணியில் மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய, அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பதவிவகித்த மிக்கி ஆர்தர் பதவி நீக்கப்பட்டு, முன்னாள் வீரரான மிஷ்பா உல் ஹக் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இதேநேரம், பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியிலும் மாற்றம் ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டபோது, சப்ராஸ் அஹமட் அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், பாகிஸ்தான் அணியின் உப தலைவராக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார்.பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் மற்றும் மூன்று 20க்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை கராச்சி மற்றும் லாஹுரில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன

Related posts: