வீரர்களின் திறமைக்கு விடுக்கப்படும் கடும் சவால் – முத்தையா

Wednesday, November 15th, 2017

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு  பரவாயில்லை, ஆனால் குறைந்த ஓவர் போட்டிகளில் கடுமையாகத் திணறி வருகிறோம். இது கடினமான தொடர் எங்கள் வீரர்களின் திறமைக்கு கடும் சவாலாக அமையும் என்று இவங்கையின் முன்னால் சுழல் பந்து கிரிககெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தொடங்கும் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட வெல்வதற்கான வாய்ப்பு இலங்கை அணிக்கு மிகமிகக் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை இந்திய – கொல்கத்தாவில் இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் ஆரம்பமாகவுள்ள  டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு  முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில் நாங்களுமே வலுவான அணிதான், இந்திய அணி வலுவான அணியாக இருந்த போதிலும் 22 ஆண்டுகளாக இலங்கையில் தொடரை வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கு ஆட்டத்தை கடினமாக்கிய மகிழ்ச்சியான நினைவுகள் எங்களிடத்தில் இன்னமும் உள்ளன. சில தொடர்களில் அனைத்துப் போட்டிகளும் வெற்றித் தோல்வியின்றி  முடிந்துள்ளன. 1997 ஆண்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கையிலும் 3 டெஸ்ட் போட்டிகளை இந்தியாவிலும் விளையாடினோம் , அனைத்துமே வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. அப்போது இரு அணிகளிலுமே சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இருந்தனர் என்றும் கூறினார்

கிரிக்கெட் இணையதளம் ஒன்றில் முரளிதரன் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது:  இந்தியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெல்வதற்கான எங்களது வாய்ப்பு மிகக் குறைவு. இந்தியாவில் அனைத்து அணிகளுமே திணறியுள்ளன. கடந்த 13 ஆண்டுகளில் இரண்டு அணிகள் மட்டுமே இந்தியாவில் தொடரை வென்றுள்ளன. இந்திய அணி தற்போது தரவரிசையில் முதலாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

நான் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய சந்தர்பங்களில் இந்திய அணியில் உலகின் தலைசிறந்த துடுபபாட்ட வீரர்கள் விளையாடினார்கள். இப்போதை விட அப்போது இந்திய அணியின் துடுப்பாட்டம் வலுவாக இருந்தது. சேவாக், கம்பீர், சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண், தோனி ஒன்றிலிருந்து 7 வரை நல்ல பேட்டிங் வரிசை. இதில் பலர் அனைத்து துறையிலும சிறந்த வீரர்கள் இதனால் கஷ்டப்பட்டோம் என்றும் முத்தையா முரளிதரன் அந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: