டெஸ்ட் உலகக் கிண்ணம் நடத்தப்படுவது மிகச் சிறந்தது – இலங்கை அணித் தலைவர்!

Friday, August 9th, 2019


முன்னாள் டெஸ்ட் அணி தலைவர் நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் இணைக்கப்படுவாரானால், அவர் விக்கெட் காப்பாளராகவே இணைத்துக் கொள்ளப்படுவார் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் குறித்து தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற போது அவர் இதனை கூறினார்.

இந்த தொடரில் லஹிரு திரிமான்ன மற்றும் ஓஷத பெர்ணான்டோ ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறக்கப்படுவார்கள் எனவும் இலங்கை அணித் தலைவர் குறிப்பிட்டார்.

அதேபோல், டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக் கிண்ணம் நடத்தப்படுவது மிகச் சிறந்தது எனவும் திமுத் கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: