க்ரெக் ப்ரத்வைற்றுக்கு மீண்டும் பந்து வீச அனுமதி!
Wednesday, October 2nd, 2019
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் க்ரெக் ப்ரத்வைற் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்துவீச அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக கடந்த மாதம் ஜமேக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது அவரது பந்துவீச்சு பாணி குறித்து சந்தேகம் எழுப்ப்பபட்டிருந்தது. அவர் கடந்த மாதம் 14ம் திகதி சர்வதேச கிரிக்கட் பேரவையினால் பந்துவீச்சு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதில் அவரது பந்துவீச்சு முறைமை சட்டத்துக்கு உட்பட்டது என்று உறுதி செய்யப்பட்டநிலையில், மீண்டும் சர்வதேச போட்டிகளில் அவரால் பந்துவீச முடியும் என்று சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.
Related posts:
வல்லவன் தொடர் ; ஊரெழு றோயல் வெற்றி!
சோகமான சாதனையை தனதாக்கியது வங்கதேசம்!
தடகள வீராங்கனையாக கலக்கும் மாற்றுத்திறனாளி!
|
|
|


