ஸ்டீவன் சுமித்தை ஊடகங்கள் சுதந்திரமாக விட வேண்டும் – டெரன் சமி !
Saturday, June 30th, 2018ஆசி அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் சுமித்தை ஊடகங்கள் சுதந்திரமாக விட வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவர் டெரன் சமி கோரியுள்ளார்.
ஸ்டீவன் சுமித் உடன் கெமரன் பன்க்ராப்ட் மற்றும் டேவிட் வோர்னர் ஆகிய அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தினை சேதப்படுத்திய குற்றத்துக்காக தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் கனடாவில் நடைபெறவுள்ள 20க்கு20 கிரிக்கட் சுற்றுப் போட்டிகளில் உள்நாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர். இந்தநிலையில் ஸ்டீவன் சுமித் நியுயோர்க்கில் இரவு விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தும் படம் ஒன்று பல பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன.
இவ்வாறு அவர் ஊடகங்களால் துரத்தப்படுவது அவரை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தும் என்று டெரன் சமி தெரிவித்துள்ளார்.
Related posts:
டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
பட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் மீர் வர்மா வெற்றி!
அடுத்த ஆண்டு பிபா பெண்கள் உலகக் கிண்ணம் !
|
|