ஸ்டம்பை குறி வைத்து வீசினார்: தனன்ஞ்சய குறித்து விராட் கோஹ்லி!

Saturday, August 26th, 2017

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனன்ஞ்சய ஸ்டம்பை குறிவைத்து வீசினார் என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போதும், இந்திய அணியை ஆட்டம் காணவைத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்திய அகிலா தனன்ஞ்சயவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

இந்நிலையில் போட்டியின் வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், உண்மையை கூற வேண்டும் எனில் நாங்கள் நல்ல பந்துகளில் தான் ஆட்டமிழந்தோம். ஒரு வீரரின் பந்து வீச்சை புதிதாக சந்திக்கும்போது அதை கணிப்பது கடினம்

அது போன்று தான் தனன்ஞ்சயாவின் பந்து வீச்சும், அவர் ஸ்டெம்ப்பை குறி வைத்து வீசினார். அடுத்த முறை அவரது பந்து வீச்சை கவனமுடன் எதிர்கொள்வோம்நான் 5-வது வீரராக களம் இறங்கியதில் எந்த வருத்ததும் இல்லை. அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related posts: