ஷெகன் ஜெயசூரியாவின் சதம் வீண்! தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்!

Saturday, October 29th, 2016

இலங்கை “ஏ” அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் “ஏ” அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள்- இலங்கை “ஏ” அணிகள் அதிகாரப்பூர்வமற்ற 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி Kurunegala நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 347 ஓட்டங்களை சேர்த்தது.

கெய்ல் கோப் (107) சதம் அடித்தார். தவிர, வால்டன் (70), அசாட் புடாடின் (57), பவல் (52) ஆகியோர் அரைசதம் விளாசினர்.

இலங்கை அணி சார்பில் ஷெகன் ஜெயசூரியா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 348 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.

நிதானமாக ஆடிய ஷெகன் ஜெயசூரியா 113 பந்தில் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அசலாங்க 44 ஓட்டங்களும், ஷன்க 32 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கை 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 109 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: