வெள்ளையடிக்கப்பட்டது இலங்கை!

Monday, September 4th, 2017

இலங்கை மற்றும் இந்தியா அணிக்கிடையில் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அணி வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாயண சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி , 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.இலங்கை அணிசார்பில் அதிபட்ச ஓட்டங்களாக திரிமான்ன 67 ஓட்டங்களையும் , மெத்திவ்ஸ் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அணித்தலைவர் உபுல் தரங்க 48 ஓட்டங்கள்.இந்திய அணிசார்பாக சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார். பும்ரா 2 விக்கட்டுக்கள்.மேலும், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி, 100-வது ஸ்டம்பிங் செய்து புதிய சாதனை படைத்தார்.அதன்படி , 239 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 46.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.இந்தியா அணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லி 110 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.கேதர் ஜாதவ் 63 ஓட்டங்களையும் , மனிஷ் பான்டே 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பந்துவீச்சில் , மாலிங்க , பெர்ணான்டோ , புஸ்பகுமார ,சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கட் விதம் பெற்றுக்கொண்டனர்.அதன்படி , 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை ​5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது

Related posts: