விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு!

Monday, June 24th, 2019

உலகக் கிண்ண தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

குறித்த போட்டிகள் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு இந்த போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் இருவரும் இணைவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், ‘சர்வதேச டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 22 திகதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு உலக கிண்ணத்துக்கு பின்னர் நிச்சயம் ஓய்வு அவசியம். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.

Related posts: