விம்பிள்டன் இறுதிப் போட்டி – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!
Monday, July 15th, 2019விம்பிள்டன் இறுதிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் – பெடரர் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை ஜோகோவிச் 7(7)-6(5) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றினார்.
3-வது செட்டை ஜோகோவிச் 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 4-வது செட்டை 6-4 என ரோஜர் பெடரர் கைப்பற்றினார். இதனால் நான்கு செட்களில் இருவரும் தலா இரண்டில் வெற்றி பெற்றதால் 2-2 என சமநிலைப் பெற்றனர்.
போட்டியில் இறுதியில் ஜோகோவிச் 7-6, 6-1, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
Related posts:
மேத்யூஸ் விலகலால் வளர்ச்சி ஏற்படாது: கவலை வெளியிட்ட ஜயசூரிய!
வலைப்பந்தாட்டத் தொடரில் வரணி மத்தி சம்பியனானது!
காலில் உபாதை - உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க வ...
|
|