விஜயரெட்ணம் ஞாபகார்த்த ரி-20 தொடர்: திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மகுடம்!

Tuesday, April 10th, 2018

விஜயரெட்ணம் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட ரி-20 துடுப்பாட்டத் தொடரில் திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இறுதியாட்டத்தில் கே.ஸி.ஸி.ஸி. அணியை எதிர்த்து திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கே.ஸி.ஸி.ஸி. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 171 ஓட்டங்களைக் குவித்தது. ஜனதாஸ் ஓர் ஓட்டத்தால் சதத்தைத் தவறவிட்டு 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பிரதாபன் 28 ஓட்டங்களையும் ஜெயரூபன் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அனுரதன் 3 இலக்குகளைக் கைப்பற்றினர்.

171 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணி 17.4 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுரேந்திரன் 89 ஓட்டங்களையும் சிவராஜ் 23 ஓட்டங்களையும் தர்சிகன் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சத்தியன் 2 இலக்குகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக திருநெல்வேலி கிரிக்கெட் கழகத்தின் சுரேந்திரன், தொடராட்ட நாயகனாக அதே அணியின் அசோக் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

Related posts: