வாக்குவாதம் முற்றியதால் பொங்கியெழுந்த பங்களாதேஷ்!

Tuesday, October 11th, 2016

பங்காளதேஷ் மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் கோபமடைந்துள்ளார்.

ஜோஸ்பட்லர் ஆட்டமிழந்தததை தொடர்ந்து பங்களாதேஷ் அணி வீரர்கள் அந்த மகிழ்ச்சியை கொண்டாடிய போது பட்லர் இவ்வாறு கோபமடைந்துள்ளார். இதன்போது அவருக்கும் பங்காளதேஷ் அணி வீரர்களுக்கும் இடையே சூடான வாக்குவாதம் இடம்பெற்றதாக  தெரியவருகிறது.

இதன்போது நடுவர்கள் தலையிட்டு அதனை  சமரசப்படுத்தியுள்ளனர். எனினும் இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

3-10

Related posts: