வவுனியா மாணவன் பளுதூக்கலில் தங்கம் வென்றார்!
Sunday, May 20th, 2018
வடமாகாண பாடசாலைகளின் 20 வயது ஆண்கள் பிரிவிற்கிடையேயான பளுதூக்கல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ்.கஜீபன் தங்கப்பதக்கம் வென்றார்.
குருநகர் சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 105 கிலோ எடைப் பிரிவில் 128 கிலோ பளுவைத் தூக்கியே கஜீபன் தங்கப்பதக்கம் வென்றார்.
அத்துடன் 100 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தினை சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன் துஜிந்தன் வென்றார்.
Related posts:
|
|
|


