கிண்ணத்தை வென்றது ஆவரங்கால் மத்தி!
Saturday, May 26th, 2018அச்சுவேலி பொலிஸ் பிரிவால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.
புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழக அணி பலப்பரீட்சை நடத்தியது.
முதலாவது செற்றை 25:23 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது இந்து இளைஞர் அணி. எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செற்களை முறையே 25:10, 25:21 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:1 என்ற செற் கணக்கில் முன்னிலை பெற்றது ஆவரங்கால் மத்தி.
நான்காவது செற்றை 25:22 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது இந்து இளைஞர்.
முதல் நான்கு செற்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா 2 செற்களைக் கைப்பற்றியிருந்தன. இறுதி செற்றில் வெற்றிபெறும் அணியே சம்பியன் என்ற நிலையில் 15:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி கைப்பற்றி கிண்ணம் வென்றது.
Related posts:
|
|