வட மாகாண கூடைப்பந்தாட்டத் தொடரில் உடுவில் மகளிர் கல்லூரி அரையிறுதிக்கு தகுதி!

Friday, May 25th, 2018

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பிரிவு பெண்கள் கூடைப்பந்தாட்டத் தொடரில் உடுவில் மகளிர் கல்லூரி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

யாழ்.மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி மோதியது.

நான்கு கால்பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது.

முதலாவது கால் பாதியில் உடுவில் மகளிர் கல்லூரி அணி 22:04 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று முன்னிலை வகித்தது.

இரண்டாவது கால் பாதியும் 18:02 என்ற புள்ளிகளின் அடிப்படையில் உடுவில் மகளிரின் வசமாகியது.

மூன்றாம் கால்பாதி 18:6 என்ற புள்ளிகளின் அடிப்படையிலும் நான்காவது கால்பாதி 13:00 என்ற புள்ளிகளின் அடிப்படையிலும் உடுவிலின் வசமானது.

இறுதியில் அந்த அணி 71:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

Related posts: