வடமாகாண எறிபந்தாட்டத் தொடரில் நான்காவது முறையாக யூனியன் சம்பியனானது

Thursday, June 7th, 2018

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான எறிபந்தாட்டத்தில் 20 வயது ஆண்கள் பிரிவில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிண்ணம் வென்றது.

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து கோட்டை கட்டிய குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அணி மோதியது.

முதலாவது செற்றில் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி 25:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. ஆனால் இரண்டாவது செற்றில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தன. இருப்பினும் பலத்த போராட்டத்தின் பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி 26:24 என்ற புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாவது செற்றைக் கைப்பற்றியதை அடுத்து 2:0 என்ற நேர் செற்கணக்கில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. மூன்றாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி அணி பெற்றது.

Related posts: