ரொனால்டோவுக்கு கை காட்டியது யார்?

Friday, June 22nd, 2018

பீபா உலக கிண்ணம் தொடரில் நடைபெற்ற ‘பி’ பிரிவு போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணி தரவரிசையில் 41வது இடத்தில் இருக்கும் மொராக்கோ அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் தலைவருமான ரொனால்டோ ஆட்டத்தின் 4வது நிமிடத்தில்இகார்னரிலிருந்து அடிக்கப்பட்ட பந்தை ஹெட்டர் மூலம் அற்புதமான கோலாக மாற்றினார். இந்தக் கோலின் மூலம் போர்த்துகல் அணி ஆட்டத்தில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.

இந்த போட்டியை மைதானத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ரொனால்டோவின் காதலி அவ்வப்போது தனது கையை காட்டி சியர் அப் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ரொனால்டோவுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது காதலியுடன் வாழ்ந்து வருகிறார்.

ஸ்பெயின் நாட்டு மொடல் அழகியான இவருக்கும் ரொனால்டோவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் நேற்று இவர் சியர் அப் செய்யும் போது இவரது கைவிரலில் உள்ள வைர மோதிரம் அனைவரது கவனத்தையும் பெற்றது.

Related posts: