ராகுல் மற்றும் பாண்டியா மீதான தடையை நீக்கியது BCCI!
Friday, January 25th, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ (BCCI) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் கே.எல் ராகுல், வேகப்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக பிசிசிஐ அவர்களை இடைநீக்கம் செய்தது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பினார்கள்.
இதனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பதக்க வேட்டையில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா!
கிரிக்கட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தொல்பொருளியல் திணைக்களம்!
பயிற்சியாளரை மாற்றும் விவகாரத்தில் குழப்பம்!
|
|
|


