யுவராஜின் திருமணத்தில் பங்கேற்கப் போவதில்லை – யுவராஜின் தந்தை அதிராடி!
Monday, November 28th, 2016இந்திய கிரிக்கடெவீரர் யுவராஜ் சிங்கின் திருமணத்தில் கலந்தக்கொள்ளப்போவதில்லை என்று அவரது தந்தை யோக்ராஜ் சிங் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், மொடல் அழகியான ஹசல் கீச்சை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். அவர்களத திருமணம் வருகிற நவம்பர் 30ஆம் திகதி பஞ்சாபில் நடக்கிறது. இந்த திருமண விராவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கும் யுவராஜ் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 30ஆம் திகதி பஞ்சாபிலும, டிசம்பர் 2ஆம் திகதி கோவா மற்றும் டில்லியிலும் நடக்கும் திருமண நிகழ்வுகளில் தான் பங்கேற்கபோவதில்லை என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 29ஆம் திகதி நடைபெறும் மெஹந்தி வைபவத்தில் தாம் பங்கெங்கபோவதாகவம் அதற்கு யுவராஜ் சிங் தன்னை அழைத்துள்ளதாகவும் அவதர் கூறினார். மேலும் கோவாவிலும் டில்லியிலம் நடக்கும் மத ரீதியிலான திரமண வைபவங்களில் தான் பங்கேற்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனக்க இறை நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மத குருக்கள் மீத இல்லை. அவர்கள் நடத்தி வைக்கும் திரமணத்தில் சான் கலந்துகொள்ளமாமாட்டேன் என்று யோக்ராஜ் உறுதிபட கூறியிருக்கிறார். யுவராஜ் சிங்கின் தந்தையும் தாயும் விவாகரத்துப் பெற்றவர்கள் தாய்-தந்தை பிரிவுக்குப் பின்னர் யுவராஜ் தாயடன் இருக்கிறார். யுவராஜின் திருமணம் அவரது தாயின் ஏற்பாட்டில் தான் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|