மாவட்ட  பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டம் – யாழ்.மத்தி – சென்.பற்றிக்ஸ் கல்லூரிகள் இறுதியாட்டத்தில் இன்று மோதுகிறது.

Wednesday, October 5th, 2016

பிரித்தானியா தமிழ் லீக் அனுசரணையில் யாழ். மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த 17 வயது பிரிவினருக்கான 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் இன்று காலை 9மணிக்கு சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதியாட்டத்தில் யாழ்.மத்திய கல்லூரி அணியை எதிர்த்து சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதவுள்ளது.

காலிறுதிப்போட்டியில் ஹாட்லிக் கல்லூரி அணியையும் அரையிறுதிப் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியையும் வீழ்த்தி சென்.பற்றிக்ஸ் கல்லூரி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அதே வேளை மத்தியக் கல்லூரி காலிறுதிப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியையும் அரையிறுதியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள்  நுழைந்தமை குறிப்பிடத்தக்கது. இச் சுற்றுப்போட்டியில் 8 பாடசாலை அணிகள் பங்குபற்றியிருந்தன. இப் போட்டி தொடரின் நடப்புச் சாம்பியனாக சென்.பற்றிக்ஸ் கல்லூரி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காகில்ஸ் வங்கியின் முகாமையாளர் எஸ்.ரஜீவன் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

picture-0112

Related posts: