மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வலுவான நிலையில்!

Saturday, August 12th, 2017

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கண்டி பல்லேகலையில் இடம்பெறும் 3 வதும் இறுதியுமான கிரிக்கட் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது

இன்றை நாள் ஆட்ட நேர நிறைவின் போது தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இந்திய அணி 6 விக்கட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 119 ஓட்டங்களையும், லோகேஸ் ராகுல் 85 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொடுத்து ஆட்டமிழந்தனர் இதற்கமைய இந்திய அணி சார்பில் ஆர்திக் பாண்டியா மற்றும் சஹா ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர் முன்னதாக இடம்பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: