முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட் காப்பாளர் பணி பறிப்பு!

Saturday, March 4th, 2017

இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணியின் தலைவரும், விக்கெட் காப்பாளருமான முஷ்பிகுரை விக்கெட் காப்பாளர் பணியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவுக்கு அணி நிர்வாகம் வந்துள்ளது.

இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 7-ம் திகதி காலியில் ஆரம்பமாகிறது.

இந்த டெஸ்டில் பங்களாதேஷ் அணியின் தலைவர், விக்கெட் காப்பாளருமான முஷ்பிகுர் ரஹிம், ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமே களம் இறங்குவார் என்று அந்த அணியின் முகாமையாளர் காலித் மஹ்மூத் நேற்று கூறினார்.

அண்மைக் காலமாக முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட் காப்பாளர் பணி மெச்சும்படி இல்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட முக்கியமான கட்டத்தில் விருத்திமான் சஹாவின் ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார்.

இதைத் தொடர்ந்தே முஷ்பிகுரை விக்கெட் காப்பாளர் பணியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவுக்கு அணி நிர்வாகம் வந்துள்ளது. அந்த அணியின் விக்கெட் காப்பாளராக லிட்டன் தாஸ் செயல்படுவார்.

45colf140557756_5285210_03032017_AFF_CMY

Related posts: