முதல் முறையாக தங்கம் வென்று பிரேசில் சாதனை!

Sunday, August 21st, 2016

ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பிரேசில் அணி முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் பிரேசில் அணியும் ஜேர்மனி அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 26-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்து அசத்தினர். பதில் கோல் அடிக்க போராடிய ஜேர்மனி அணி இரண்டாவது பாதியில் கோல் அடித்து சமன் செய்தது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. இதில் பிரேசில் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

கால்பந்து அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உள்ள பிரேசில் அணி ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

Related posts: