முதன்முறையாக “பிங்” கலர் பந்தில் விளையாடும் இலங்கை!

Thursday, September 29th, 2016

இலங்கை கிரிக்கெட் அணி பிங் பந்தைப் (Pink Ball) பயன்படுத்தி முதலாவது போட்டியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் விளையாடவுள்ளது.

நான்கு நாட்களைக் கொண்ட உத்தியோகப்பற்று அற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும். போட்டியின் போது மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது. சாதாரண போட்டிகளில் வெள்ளை பந்து பயன்படுத்தி விளையாடி வரும் நிலையில் தற்போது பிங் நிறத்திலான பந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரவு – பகலாக நடைபெறும் போட்டிகளில் பிங் நிறப்பந்து பயன்படுத்தப்பட்டு வருவதோடு, வெள்ளை பந்தை விட வேகம் குறைந்தும் காணப்படுகின்றது. மேலும், சிவப்பு பந்தை காட்டிலும் இரவு வேளைகளில் பயன்படுத்துவதற்கு பிங் பந்து (Pink Ball) உகந்தது.

Pink-Ball

Related posts: