மீண்டும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை!

Monday, July 22nd, 2019

மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இலங்கை சம்பியனாக தெரிவாகியுள்ளது.

சர்வதேச ரீதியிலான பேஸ்போல் தொடரொன்று இலங்கையில் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் தொடர் கடந்த ஆறு நாட்களாக தியகமையில் நடைபெற்றது. ஏ குழுவில் போட்டியிட்ட இலங்கை அணி லீக் சுற்றில் சகல போட்டிகளிலும் வெற்றியீட்டியதோடு அரை இறுதியில் ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி 9 இன்னிங்ஸ்களைக் கொண்ட போட்டியை 5-4 என கைப்பற்றி சாம்பியன் மகுடத்தை வென்றது.

Related posts: