மீண்டும் சர்வதேச அரங்கில் அப்ரிடி!

Thursday, May 31st, 2018

பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஷாகித் அப்ரிடி, தனது கடைசி சர்வதேச போட்டியில் அணித்தலைவர் பொறுப்பில் விளையாட உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் புயலால் பாதிக்கப்பட்டன. இந்த மைதானங்களை சீரமைக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் உலக லெவன் அணி மோதும் டி20 போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இப்போட்டிக்கு ஐ.சி.சி சர்வதேச அந்தஸ்து வழங்கியதைத் தொடர்ந்து, நாளை லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஷாகித் அப்ரிடிக்கு இதுதான் கடைசி சர்வதேச போட்டியாகும். கடந்த ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், காயம் காரணமாக உலக லெவன் அணியின் தலைவர் பதவியில் இருந்து இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் விலகியதால், அப்ரிடி அந்த அணிக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம், தனது கடைசி சர்வதேச போட்டியில் ‘அணித்தலைவர்’ என்ற பெருமையுடன் அப்ரிடி விடைபெற உள்ளார். இயன் மோர்கனுக்கு பதிலாக, இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related posts: