மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்  – கால் இறுதியில் நடால்,ஜோகோவிச் !

Sunday, April 23rd, 2017

மொனாக்கோவில் நடைபெற்று வரும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட நட்சத்திர வீரர்கள் ரபேல் நடால் (ஸ்பெயின்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றுள்ளனர்

மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் மோதிய நடால், அதிரடியாக விளையாடி 6-1, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். இபோட்டி 1 மணி, 8 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ கரினோ புஸ்டாவை எதிர்கொண்ட ஜோகோவிச் 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 26 நிமிடம் போராடி வென்றார்.

ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் ராமோஸ் கால் இறுதியில் 6-2, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
போபண்ணா அபாரம்: மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – பாப்லோ கியூவஸ் (உருகுவே) இணை 6-7 (6-8), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் தென் ஆப்ரிக்காவின் ரேவன் கிளாசன் – ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

Related posts: