மாகாண உதைபந்தாட்ட சம்பியனாகியது சென். லூசியா!

Tuesday, July 12th, 2016
வடமாகாண மட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 19 வயதுப்பிரிவில் மன்னார் பள்ளிமுனை சென். லூசியா மகா வித்தியாலயம் சம்பியனாகியது.
சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியும் மன்னார் பள்ளிமுனை சென். லூசியா மகா வித்தியாலய அணியும் மோதின.
போட்டி நேரத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் அடிக்கவில்லை. இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. இதில் சென். லூசியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில் இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் செட்டிக்குளம் மகா வித்தியாலய அணியை வென்றது.

Related posts: