மறுக்கிறது பாகிஸ்தான்!

Friday, September 13th, 2019

பாகிஸ்தானுக்கு செல்லவுள்ள இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதனை பாகிஸ்தான் கிரிக்கட் சபை மறுத்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்தே பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோரியிருந்தது.

இந்நிலையில் தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாகவே இந்த அச்சுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் நடுப்பகுதி வரை கராச்சி மற்றும் லாஹூர் நகர்களில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: