மணியடித்து ஆரம்பித்து வைத்தார் சங்கா!
Friday, June 10th, 2016
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி நேற்று இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் லோட்ஸ் மைதானத்தின் பாராம்பரிய முறைப்படி அங்கு இடம்பெறும் போட்டியை முக்கியஸ்தர் ஒருவர் 5 நிமிடம் அங்குள்ள மணியை அடித்து போட்டியை ஆரம்பித்து வைப்பார்.
அந்தவகையில் நேற்றைய போட்டியை இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் ஜாம்பவானுமாகிய குமார் சங்ககார குறித்த மணியை ஒலிக்கவிட்டு போட்டியை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
ஒலிம்பிக் தீபத்தை திருட முயற்சி!
வித்தியானந்தா கல்லூரிக்கு மகுடம்!
உலகக் கிண்ண கிரிக்கெற்: முதலாவது போட்டி இன்று..!
|
|
|


