போராடியது மேற்கிந்தியதீவுகள் : 15 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில்!

Friday, June 7th, 2019

உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணத் தொடரின் 10வது லீக் போட்டியில், மேற்கிந்தியதீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியதீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 288 ரன்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக நாதன் கொல்டர்-நைல் 92 ரன்களை குவிந்திருந்தார். மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் கார்லோஸ் ப்ராத்வாட் 3 விக்கெட்டுகளையும், ஓஷேன் தாமஸ், ஷெல்டன் கோட்ரெல், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ஷாய் ஹோப் 68(105), ஜேசன் ஹோல்டர் 51(57) தவிர மற்ற வீரர்கள் நிலைக்க தவறியதால், அணி தடுமாற ஆரம்பித்தது.

கடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்ததால், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை மட்டுமே அணி குவிந்திருந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஆடம் சாம்பா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

Related posts: