புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி!

Tuesday, April 23rd, 2019

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு  எதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், டெல்லி கெப்பிரல்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.

ராஜஸ்தான் அணி சார்பில், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஜின்க்யா ரஹானே ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதையடுத்து, 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

டெல்லி அணி சார்பில் ரிஷப் பாண்ட், ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் ஊடாக 14 புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லி அணி ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னை அணி, 14 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.

மும்பை அணி, 12 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும், ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள், தலா 10 புள்ளிகளுடன் 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களிலும் உள்ளன.

கொல்கத்தா அணி, 8 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திலும், இராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் பெங்களுர் றேயல் செலஞ்சர்ஸ் அணிகள், தலா 6 புள்ளிகளுடன் 7ஆம் மற்றும் 8ஆம் இடங்களிலும் உள்ளன.

இதேவேளை, இன்றைய தினம், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையிலான போட்டி, இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Related posts: