பார்சிலோனா ஓபன் டென்னிஸ் கிண்ணத்தை சுவீகரித்தார் நடால்!

Tuesday, May 2nd, 2017

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் சம்பியன் கிண்ணத்தினை பத்தாவது முறையாகவும் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் சுவீகரித்துள்ளார். பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஒஸ்ரிய வீரர் டொமினிக் தீய்ம்மை எதிர்கொண்ட நடால் 6:4, 6:1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கினார்.

இது நடாலின் பத்தாவது பார்சிலோனா ஓபன் டென்னிஸ் சம்பியன் கிண்ணம் என்ற வகையில், களிமண் தரையின் மூடிசூடா மன்னன் என்பதை அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றார்.

போட்டியின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நடால், “போட்டி மிகவும் நன்றாக இருந்தது. அதனை விபரிக்க கடினமாக உள்ளது. எனது நாட்டு மக்கள் முன்னிலையில் விளையாடி 10ஆவது முறையாக கிண்ணம் வென்றிருப்பது நம்ப முடியாத உணர்வாக உள்ளது. இது நம்பமுடியாத ஒரு கனவாகவும் உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த இடத்தில் எல்லோருக்கும் நன்றியைக் கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts: