பாகிஸ்தான் அணித்தலைவர் அசார் அலி ராஜிநாமா!

Friday, February 10th, 2017

பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் அசார் அலி தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் அஹமது புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.
அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடர் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து அசார் அலிக்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சஹாரியார் கான் இது தொடர்பில் தெரிவித்ததாவது,

அசார் அலி இன்று (பிப்.9) என்னை சந்தித்தார். அப்போது கேப்டன் பதவியால் தனது ஆட்டத்திறன் பாதிக்கப்படுவதாகவும், அதனால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கேப்டன் பதவியை ஏற்க முடியுமா என சர்ஃப்ராஸ் அஹமதுவிடம் கேட்டேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக சர்ஃப்ராஸ் அஹமதுவை நியமித்துள்ளோம் என்றார்.

azarali

Related posts: