பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரினார் ஸ்மித் !

Saturday, March 31st, 2018

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்கு அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

குறித்த டெஸ்ட் போட்டியின்போது அவுஸ்திரேலிய அணி வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தும் காணொளி காட்சிகள் வெளியாகின. இதற்கு உடந்தையாக இருந்ததாக வோர்னர் மீது குற்றம்சாட்டப்பட்டது.  இந்த தகவல் அணித்தலைவர் ஸ்மித்துக்கு தெரியும் என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து ஸ்மித், வோர்னர் ஆகியோருக்கு கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும் இதற்கு தான் முழு பொறுப்பேற்பதாகவும் அவுஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மித் கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஸ்மித் பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் தான் யாரையும் குறைக்கூற விரும்பலில்லை என்றும், ஒரு அணித்தலைவராக இந்தத் தவறை தான் கண்காணித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

Related posts: